நீரூறும் மண்ணாய்
என் மனம் நீர்த்த
கண்ணீர்,
கானலாய் கரையுமா
இல்லை உன் மனம்
வருடி சேருமா?
நீர் சுமந்த வானமாய்
கனக்கின்ற என் இன்பம்
வனம் மேல் பொழியுமா?
இல்லை கடல் நீர்த்து போகுமா?
ஒரு கனம் மனம் சுடும் அனலாய்?
மறுகனம் மருந்திடும் பனியாய்?
எது நீ…
உயிர் உணர்த்தும் காற்றா?
உனை உயிர்ப்பிக்கும் கதிரா?
எது நான்…
உற்று நோக்கும் உன் விழி
என்னுள் எதை கடத்தி
உன்னில் எதை விதைக்கும்?
என் தேடலின் முடிவாய் நீ …
உன் புரிதலில் தொடக்கமாய் நான் …
வாழ்வின் புதிராய் நம் அன்பு…