ஒரு மொழி கூறும் உணர்வு
இந்த நிசப்தம்…
என் காதின் இறுக்கம்
கலைக்கும் ஒரு ராகம்
வெகு தூரமாய்…
மனம் கொண்டு இனைக்கும்
ஒரு மந்திர கோள்
உன் வசம்…
நீ என் பெருமை
கடந்த வரமாய்
என்னிடம் இரவல் வாங்கிய
சில பல சாயல்கள் கடந்த
உன் சுயமாய் வெளிபடும்
அந்த உன்னத தருணமே
என் காத்திருப்பின் உச்சம்…