ஒரு தவம் தந்த கொடையாய்
இதழ் விரித்து நின்றாய்
உன் புன்னகை என் மனம் சேரவே
வரம் தந்த கையால்
வலி தீர்த்து நின்றாய்
உன் மொழி என் செவி சேரவே
விரிகின்ற சிறகாய் என் மனம்
பறக்கின்ற தூரமெல்லாம் உன் முகம்…
தேனாய் பாயும் என் தமிழ்
கொஞ்சும் அகரமாய் உன் மொழி…
எதில் மயங்கி நிற்பேன்…
கன்னகுழி சிரிப்பா…
கவி தோற்கும் மழலையா…
பூ பனியாய் உன் கை…
என் முகம் வருடும் நொடி
கண் பனித்து
இதழ் மலர்ந்து
உன் சிறு விரலின் சிறையில் நான்…
Beautiful.
Happy new year.
LikeLiked by 1 person
Thank you, LG , and a very happy new year to you too.
LikeLike