வார்த்தைகள் கோர்த்து வானவில்
எய்கிறேன்
பூக்களை தூவியே பாதைகள்
பயற்கிறேன்
புன்னகை வீசியே வாழ்க்கையை
புசிக்கிறேன்
வண்ணங்கள் சிந்தியே கனவுகள்
வரைகிறேன்…
நேசங்கள் செலுத்தியே வாஞ்சைகள்
குவிக்கிறேன்…
என் …
இருவிழி பாதையில்
இந்த உலகையே
ஆராதிக்கிறேன்…