உனை கடக்கும் தூரங்கள்
மெலிகின்றது
எனை மீட்கும் தருணங்களாகின்றது
தொலைத்த காதல் கனக்கின்றது
ஒரு உறவின் அவசியம்
புரிகின்றது
என் வானத்தின் விண்மீன்கள்
வெகுதூரமாய்…
இந்த பௌர்ணமி நிலவும்
மிளிர்கின்றது…
கலைகின்ற மேகங்கள் உயிர்
மீட்குமா…
ஒரு இதமான குளிர் காற்று
இதமூட்டுமா…
என் சுயம் மென்மேலும் உயர்
தேடுமா…
இந்த வாழ்வின் அர்த்தங்கள்
எனை சேருமா…