பரிச்சியம் வேண்டினேன்
பரிகாசம் செய்தாய்…
விலகி நின்றேன்
விரும்பி வந்தாய்…
நட்பா என்றேன்
நாணிச் சிரித்தாய்…
விழியின் விரிப்பில்
வாஞ்சைகள் சிதறினாய்…
வயதின் கனவில்
வண்ணங்கள் தீட்டினாய்…
அன்பா… காதலா…
மயக்கம்கள் தந்தாய்…
பிரிந்த போதிலும்
பரிவே வேண்டினாய்…
மீண்டும் …
பார்த்த நோடியில்
காலத்தை கடத்தினாய்…
விடை பெறும் தருணத்தில்
ஒரு சிறு தயக்கமும் தந்தாய்…