மழை நின்ற ஓர் நாளில்
சிலிர்த்து உறங்கிய மனதில்
நனைந்தபடி ஓர்கனவு…
துளிகளுக்குள் ஒளிந்தபடி
உன் சாயல் மறைவிற்குள்…
நீ யோ அது…
நானேதானோ…
உன் பரிமானம் ஏற்றபடி…
நினைவில் தொலைத்த நகலை
பற்றியபடி…
முன் ஒரு அடி எடுத்தால் எனையே
விழுங்கி…
பின் ஒரு அடி எடுத்தால் உனையே
ஒளித்து…
சதுராடும் இருளில் நமையே
தொலைத்து…
தோய்த்து எடுத்த வானத்தில்
வானவில் வரைந்து…
தேடுகிறேன் உன்னை …
எந்த வண்ணத்தில் உனை
மறைத்து வைத்தேன் என்று
மறந்ததனால்…