இதயத்தின் முதல் அன்பாய்
முகுளத்தின் முதல் அறிவாய்
தாயும் மொழியும்,
நாவின் தீஞ்சுவையாய் பதிந்த
முதல் உணவும் ஒலியும்
தாயும் மொழியும்,
பிரியும் பொழுதில் உணர்ந்திடும் வலியாய்
கதைகும் நொடியில் மகிழ்ந்திடும் வரமாய்
தாயும் மொழியும்,
தாய் தந்த தமிழாய்
தமிழ் ஈன்ற தாயாய்
மனம் தளும்பும் உணர்வாய்
என் சுயம் பேனும் அறனாய்
தாயும் மொழியும்…