மணல் மூடிய ஆறாய்
தடம் தேடும் வாழ்வில்
தடுமாறும் நெஞ்சின்
தடயங்கள் எங்கே?
மணம் சிதைந்த பின்பும்
மலர் வருடும் காற்றாய்
சுவாசத்தின் சுவடில்
ஒழிந்திருக்குமா மனிதத்தின் நேசம்?
ஒரு சொல் தாங்கி வருகின்ற
மொழியின் திறன் சிதைக்குமா
யுகங்களின் மௌனத்தை?
உலகனைத்தும் சிந்தும்
சிறுசிறு புன்னகை
ஆழியின் எழுச்சியாய்
மீட்குமா அடிமனதின்
புதையுண்ட கரிசனத்தை?