துயிலாத இரவுகளில்
என் கண்ணோடு கதைப் பேசியவள்
தொலைதூர பயணங்களில்
என் வழிதுணைக்கு உடன் வந்தவள்
கழிவிரக்கத்தில் மனம் துவள்கையில்
என் நம்பிக்கையை எழச்செய்தவள்
கவலைகள் எனை சூழ்கையில்
என் கலக்கத்தை களையெடுத்தவள்
மானிடத்தின் பல பரிமானங்களை
எனக்கு பரிச்சியமாக்கியவள்
என் சிந்தனைகளையும் அது ஒத்த
என் செயல்களையும் விரிவாக்கியவள்
முதிர்ச்சியை வயதோடு நிறுத்தாமல்
என் வாழ்வோடு கொண்டு சேர்த்தவள்
பல நேரம் சிந்தனைகளையும் சில நேரம்
சோகங்களையும் சல்லிசாக தந்தவள்
இலகுவாய் உலகை
இலவசமாய் சுற்றி காட்டியவள்
என் சுயம் அறிய
எனை ஊக்குவிப்பவள்
ஒவ்வொரு நாளும் எனக்கு புதுப்பது
அனுபவங்களை அள்ளிக் கொடுப்பவள்
பல முகங்களுடனும்
பற்பல பெயர்களுடனும்
என்றும் என் கைபிடிக்குள்
என் இனிய இலங்கிழாய்
புத்தகம்
புத்தகம்
Advertisements
Simple and superb Tamil poetry
LikeLiked by 1 person
Thankyou Priya.
LikeLiked by 1 person
lovely poem! enjoyed it a lot 🙂
LikeLiked by 1 person
Thanks a lot,Sara
LikeLiked by 1 person